நானறிவேன் அம்மா

நானறிவேன் அம்மா !இதயம் வருடும்காதலை விடஇதயம் துடிக்கச் செய்ததாய்மை பெரிது.....!மனதை மயக்கும்காதலை விடமண்ணில் தவழச் செய்ததாய்மை பெரிது....!நானறிவேன் அம்மா!சிலநாளாய் இதயத்தில்சுமக்கும் காதலைவிடபத்துமாதம் கருவில்சுமந்த தாய்மை பெரிது !இதயத்திற்கு சிம்மாசனமிடும்காதலை விடஆன்மாவிற்கு கோவில் கட்டியதாய்மை பெரிது..!நானறிவேன்அம்மா !எனை(நான்) விரும்பும்காதலை விடஎனை உயிராக்கியதாய்மை பெரிது..!கண்களால் இணைக்கும்காதலை விடஇரத்தத்தால் பிணைத்ததாய்மை பெரிது..நானறிவேன் அம்மா!உனை வருத்தி என்இணை தேட நான்முயலவில்லை..இதுவே பொருத்தமெனநீ காட்டு...காதலிக்கிறேன் ..நானும் தாய்மை உணர.....!
திருத்த முடிந்தால் .....
உன் காதலை
நான்
உணராமலில்லை...
உன் நினைவுகள்
என்னைச் சுற்றி
வருவதும்
தெரியாமலில்லை...
நானே
உன் வாழ்வில்
வசந்தமென்ற
உன் நினைப்பும்
புரியாமலில்லை...
என் கடைக்கண்
பார்வை ஒன்றுக்காக
பல நாளாய்
காத்திருக்கிறாய்
என்பதையும்
அறியாமலில்லை....
ஆனால்..
என்ன செய்வது சொல்
என் இனிய நண்பனே ???
காதல் என்பதையே
சமூகக் குற்றமாய்
எண்ணும்
இந்த சமூகத்தை
உன்னால்
திருத்த முடிந்தால் சொல்.........
நானும் உன்னைக்
காதலிக்கிறேன்....
இதயத்துள் நீ !
இன்று... நீ என் இதயத்தில்
வார்த்தை
முட்களை விதைக்கிறாய் !
வருத்தமாக இருக்கிறது..! எனக்கு வலிப்பதால் அல்ல!
நீ
முதன்முதலில் உன் பாதம் பதித்து வரும்போது.. உனக்கு வலிக்குமே என்று ...!
அறிவாயா???
நீ உன் வார்த்தைகளால்பிழிந்து போட்டஎன் மனதில் தான்எத்தனைசோகச் சுருக்கங்கள்அறிவாயா????
எதிர் கொள் !
உயிர் துறக்க ஒருசில நிமிடங்கள் போதும்..உயிர் கொடுக்க ஒவ்வொரு அன்னையும் மறுபிறவி எடுப்பதைஎண்ணிப் பார் !நீ வெறுமையைக் கொண்டாடுகிறாய்...வாழ்வை மரணத்தின் கையில் கொடுக்கிறாய்...நம்பிக்கை எனும் சிறகை உணர் !கண்ணீர்த் துளிகளைவார்த்தைகளாக்கி வாதாடு !துணி்ந்தால் கடல்நம்காலைத் தொட்டுக் கும்பிடும் ! பயந்தால் பனித்துளி கூடமூழ்கடித்து விடும் !எதிர்கொள் !!!மரணத்தின் முன் உன்இறுதி நேர துணிவைவாழ்வின் மீது திருப்பு !வாழ்க்கை நாட்கணக்கல்ல..செயல் கணக்கு...நல்லதும் கெட்டதும்உலகத்தில் இல்லைஉள்ளத்தில் தான் !!!
உன்னால்
உறக்கத்தை எதிர்நோக்கியேவிழித்திருக்கிறது என் மனம் ...
கனவில் மட்டுமே உன்
நேசக்கரங்கள் நீள்வதால் !!!
அந்த தருணம்...
ஒரு முறை தான் நிகழ்ந்தன என்றாலும்ஓராயிரம் முறைமனதிற்குள் ஒளிபரப்பிஅதே சிலிர்ப்பை..அதே சுகத்தை....அனுபவித்திருக்கிறேன்....இதோ ...மறு ஒளிபரப்பு ...முகத்தில் பூரிப்பு வழியசந்தோசக் கீற்றுகள்கண்களில் மின்னலடிக்க...இப்பரந்த உலகில்இந்நிமிடம் என்னைவிட யாரும்இத்தனை இன்பமாய்இருந்துவிட இயலாதுஎன்ற இறுமாப்புஇதயம் முழுக்க நிரம்பியஅந்த தருணம்....ஓருடலில் ஈருயிராய்சில மாதங்கள்என்னுள் நி்றைந்தபுதிய உயிரின்முதல் அழுகுரல்காற்றைக் கிழித்துக்கொண்டுகேட்ட தருணம்......இரத்தமும் பனிநீருமாகஒரு பஞ்சுப் பொதிபோல்தொப்புள் கொடியறுத்தகுழந்தையைநெஞ்சில் சுமந்தஅந்த தருணம்....ஒரு முறை தான் நிகழ்ந்தன என்றாலும்ஓராயிரம் முறைமனதிற்குள் ஒளிபரப்பிஅதே சிலிர்ப்பை..அதே சுகத்தை....அனுபவித்திருக்கிறேன்....
கனவில் மட்டுமே
உறவென்று எண்ணி உறவாட நீ மட்டுமே எனக்கு... என் உள்ளம் நெகிழ வைத்த இசையை நீயும் ரசிக்கிறாய்..... எனை பாதித்த கவிதை உனையும் ஈர்த்திருக்கிறது..... என் மனக் குமுறலுக்கு செவி சாய்த்து சிறு அணைப்பில் எனை பரவசப் படுத்துகிறாய்... துன்பத்தில் அழும்போது மெளனமாய் புன்னகையில் மனதை லேசாக்குகிறாய்.... உன் மெல்லிய விரல்கள் தலை கோதிவிட மடியில் முடங்கித் தூங்கிப் போகிறேன் நிம்மதியாய்.... கனவில் மட்டுமே நினைவாகிப் போன நீ... கனவை நினைவாக்க என்று வருவாய்...? காத்திருக்கிறேன் கண்களில் காதலோடு...!